×

தேவதானப்பட்டி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தேவதானப்பட்டி, மே 10: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் செந்தில்(40). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார். செந்திலை கடந்த 4 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் ஜெயமங்கலம் காவல்நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் துர்நாற்றம் வீசியது.

அவ்வழியாக நடந்து சென்றவர்கள் தென்னை தோப்பை பார்த்தபோது, செந்தில் மரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் அழுகிய நிலையில் இருந்த செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேவதானப்பட்டி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Mani Makan Senthil ,Jayamangalam Melatheru ,Devadanapatti, Theni district ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை