×

ஐதராபாத்தில் தாக்குதல் நடத்த சதி 16 தீவிரவாதிகள் அதிரடி கைது

திருமலை: ஐதராபாத் நகரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டி முகாமிட்டிருந்த 16 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக போபால் போலீசார் மற்றும் மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில உளவுத்துறை அதிகாரிகளுடன் போபால் போலீசார் ஐதராபாத்தில் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

அப்போது ஐதராபாத்தில் பதுங்கி இருந்த 16 தீவிரவாதிகளை போபால் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் போபாலைச் சேர்ந்த 11 பேரையும், ஐதராபாத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் ஏர்கன்கள் கைப்பற்றப்பட்டன. மத்திய புலனாய்வு அமைப்புகளின் தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் ஐதராபாத்தில் கடந்த 18 மாதங்களாக தங்கியிருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கி திசை திருப்பும் வகையில் பல சதித்திட்டங்கள் தீட்டி வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐதராபாத்தில் தாக்குதல் நடத்த சதி 16 தீவிரவாதிகள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Hyderabad Tirumala ,Hyderabad ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்