×

தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைப்பு..!!

சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 2021ம் ஆண்டு ஜூலை 8ம் தேதியன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ஓர் உபதலைவர், 14 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் புதிய 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு இவ்வாரியத்தை திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.61. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(ஆதிந.6)த்துறை, நாள். மே 3ம் தேதி ஆணையிடப்பட்டது.

The post தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து வாரியம் திருத்தியமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Cleaner Employees Welfare and Board ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Cleanup Employees Welfare Board ,Dinakaran ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...