×

கடைசி ஒருநாள் போட்டியில் நியூசி. ஆறுதல் வெற்றி: 2 நாளில் நம்பர் 1 இடத்தை இழந்த பாகிஸ்தான்

கராச்சி: பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டியிலும் பாகிஸ்தான் வென்ற நிலையில் கடைசி போட்டி நேற்று கராச்சியில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 49.3 ஓவரில் 299 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 87, கேப்டன் லதாம் 59 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான், 46.1 ஓவரில் 252 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 47 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது. பாக். அணியில் இப்திகார் அகமது நாட் அவுட்டாக 94, சல்மான் 57 ரன் எடுத்தனர்.

நியூசிலாந்து பவுலிங்கில் ரச்சின் ரவீந்திரன், ஹென்றி ஷிப்லி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஹென்றி ஷிப்லி ஆட்டநாயகன் விருதும், பாகிஸ்தானின் பகார் ஜமான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். 4-1 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. முதல் 4 போட்டியில் வென்ற பாகிஸ்தான் கடந்த 5ம் தேதி ஐசிசி ஒன்டே தரவரிசையில் முதலிடத்தை பிடித்த நிலையில், நேற்றைய தோல்வியால் (112 புள்ளி) 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா தலா 113 புள்ளிகளுடன் முதல் 2 இடத்தில் உள்ளன.

The post கடைசி ஒருநாள் போட்டியில் நியூசி. ஆறுதல் வெற்றி: 2 நாளில் நம்பர் 1 இடத்தை இழந்த பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Newsi ,Pakistan ,Karachi ,New Zealand ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...