ஊத்தங்கரை, மே 8: ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை போலீசார், கேத்துநாயக்கன்பட்டி, நாயக்கனூர், சிங்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கேத்துநாயக்கன்பட்டியில் ஹான்ஸ் விற்ற கிருஷ்ணன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நாயக்கனூர் பகுதியில் கஞ்சா விற்ற குமரேசன்(70) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும், சிங்காரப்பேட்டையில் மதுபாட்டில்களை விற்ற கணபதி(40) என்பவரை கைது செய்து 22 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். சாமல்பட்டி போலீசார் குன்னத்தூர் பகுதியில் மது விற்பனை செய்த அருணாச்சலம்(60), ஊத்தங்கரை போலீசார், மதுவிற்ற ஆனந்தன்(40), சத்யா(38) ஆகியோரை கைது செய்து 11 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அம்பேத்கர் நகரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்ற சின்னத்தாய்(57) என்பவரை கைது செய்த போலீசார் 5 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா, மது விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.