×

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் நண்பருக்கு சரமாரி கத்தி குத்து: புதுமாப்பிளை மற்றும் நண்பர்கள் தலைமறைவு

கும்மிடிப்பூண்டி, மே 8: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(28). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் இதே பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகிறார். காட்டுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(25). இவருக்கு, கடந்த 30 தேதி ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரியம்மன் சன்னிதானத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யுவராஜின் நண்பரான வசந்தகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், யுவராஜ் நேற்று முன்தினம் மதியம் தன்னுடைய நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஆத்துப்பாக்கத்திலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த வசந்தகுமாரிடம் என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றியது. இதனால், ஆத்திரம் அடைந்த யுவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தகுமாரின் நெற்றி மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அருகிலிருந்தவர்கள் வசந்தகுமாரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வசந்தகுமாரின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், யுவராஜ் காதல் திருமணம் செய்து கொள்வது பிடிக்காததால் வசந்தகுமார் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், யுவராஜ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து, இரண்டு தனிப்படை அமைத்து யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் நண்பருக்கு சரமாரி கத்தி குத்து: புதுமாப்பிளை மற்றும் நண்பர்கள் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Pudumapplai ,Kummidipoondi ,Vasantakumar ,Athuppakkam ,Putumapplai ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...