×

மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்புகள்: ஈரோட்டில் 8ம் தேதி துவக்கம்

 

ஈரோடு, மே 6: ஈரோடு, பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத்திருக்கோயிலில் புதிய யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளன. நாளை மறுநாள் (மே 8ம் தேதி) திங்கட்கிழமை தொடங்கி மே 22ம் தேதி வரை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஒரு வகுப்பும், பெண்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ஒரு வகுப்பும் மே 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை மற்றொரு வகுப்பும் துவங்கவுள்ளன. இவ்வகுப்புகளில் எளியமுறை தியானப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, காயகல்ப பயிற்சி மற்றும் சூரியநமஸ்காரம் ஆகிய அடிப்படை பயிற்சிகள் கற்றுத்தரப்படவுள்ளன.

14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சிகளை கற்றுக் கொள்வதன் மூலம் உடல் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும், மன அழுத்தம் குறையவும் அமைதி பெறவும், மேலும் உயிர் வளம் பெறவும், இளமை நீடிக்கவும் செய்கிறது. மேலும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகளும் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதிலும் சேர்ந்து பயன்பெறலாம் என நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சேர்க்கை விவரங்களுக்கு 99449-30539,94433-61227 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்புகள்: ஈரோட்டில் 8ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Manavalkalai Forum ,Vidhuthrukoil ,Erode, Periyar ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு