×

அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சுவலி

சென்னை: சென்னை வேப்பேரியில் போ லீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது. 8 மாடி கொண்ட கட்டிடத்தின் 8வது மாடியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு வழக்குகள் தொடர்பான கோப்புகளை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கமிஷனரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில் ஒரு அடைப்பை ஆஞ்சியோ சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. மற்றொரு அடைப்பை டாக்டர்கள் சரிசெய்தனர். தற்போது சங்கர் ஜிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து மருத்துவர்களிடம் பேசினார். …

The post அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சுவலி appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Shankar Jiwal ,CHENNAI ,Po Lease ,Vepperi, Chennai ,Commissioner ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனங்களின் நம்பர்...