×

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

 

ஈரோடு, மே 4: ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரது மகன் பாசில் (26) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல பவானி புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், தேவூர், புள்ளாக்கவுண்டன்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகன் விஜயன் என்கிற விஜயகுமார் (26), தூத்துக்குடி மாவட்டம், வாத்துதெருவை சேர்ந்த ஜவகர் மகன் சபீர்முகமது (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Karungalpalayam ,BP Agraharam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...