×

உடல் மொழி, வார்த்தைகளால் மக்களை மகிழ்வித்த நடிகர் மனோபாலா காலமானார் : திரையுலகினர், ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69 . கல்லீரல் பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், மனோபாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம் சூலூரில் 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த இவர், இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனோபாலா பின்னர் இயக்குனரானார்.

தாய்மாமன், நட்புக்காக, தாஜ் மஹால், மின்சாரக் கண்ணா , சேது, ரமணா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மனோபாலா.புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.1982ம் ஆண்டு ஆகாயகங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.ரஜினியின் ஊர்க்காவலன், விஜயகாந்தின் சிறைப்பறவை படங்களை இயக்கியவர் மனோபாலா.நான் உங்கள் ரசிகன், பிள்ளைநிலா, உள்ளிட்ட 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் கடைசியாக நடித்து வந்தார்.தனது உடல் மொழி வார்த்தைகளால் மக்களை வெகுவாக கவர்ந்த மனோபாலாவின் இறப்பு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணிக்கு ஏ.வி.எம். மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

The post உடல் மொழி, வார்த்தைகளால் மக்களை மகிழ்வித்த நடிகர் மனோபாலா காலமானார் : திரையுலகினர், ரசிகர்கள் பேரதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Manopala ,Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்