×

கத்திமுனையில் வழிப்பறி 5 பேர் கைது

 

மதுரை, மே 3: மதுரை கோ.புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(39). இவர், வீட்டிற்கு அருகே உள்ள கண்மாய்க்கரை பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்மக்கும்பல், ராஜாவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.550ஐ பறித்துச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, கத்திமுனையில் வழிப்பறி செய்த, புதூர் காந்திபுரம் 4வது தெருவைச் சேர்ந்த, ராமு மகன் பிரகாஷ்(23), புதூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் மணிகண்டன்(எ)பூனை மணி(19), மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சேதுபாண்டி(18) மற்றும் சீர்காழி மகன் சிவகுருநாதன்(19), வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கார்த்திக்(19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

The post கத்திமுனையில் வழிப்பறி 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kathimuna ,Madurai ,Raja ,Putur Gandhipuram ,Madurai district ,Kanmaikarai ,Kathimoona ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை