×

மழை மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா

 

ஈரோடு, மே 3: ஈரோடு அசோகபுரம் மழை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டு, தினந்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் பக்தர்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று(3ம் தேதி) பொங்கல் வைத்தலும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

The post மழை மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Rain Mariamman Temple ,Erode ,Siritra Festival ,Erode Ashokapuram Rain Mariamman Temple ,Rain ,Mariamman ,Temple ,
× RELATED பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா