×

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

 

பூந்தமல்லி: ஆவடி – அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, மின்சார ரயில் மோதி அடையாளம் தெரியாத ஒருவர் பரிதாபமாக பலியானார். ஆவடி அடுத்து அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று காலை 10 மணி அளவில், 40 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஆவடி, அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் மோதியதில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Avadi ,Annanur ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ