×

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நேற்று கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கிருந்த பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், ரஸ்னா உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். இதில், சோழிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kuntarathur ,Kerugambakkam ,Kuntarathur East Union ,Dinakaran ,
× RELATED மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை...