×

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0: 72 கஞ்சா வியாபாரிகள் கைது

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் கடந்த 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலை பேசி எண்ணிலும் tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0: 72 கஞ்சா வியாபாரிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Operation Cannabis Hunting 4.0:72 ,Chennai ,Tamil Nadu ,Chief Minister of ,Operation Cannabis Hunting ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...