×

எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பைக்குகள் எரிந்து நாசம்

பெரம்பூர்: பாரிமுனை வாலாஜா ரோடு கன்னியப்ப முதலி தெருவை சேர்ந்த பிரகாஷ் (57), பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் எலக்ட்ரிக்கல் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இங்குள்ள எலக்ட்ரிக்பைக்கை சார்ஜ் போட்டபோது, திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தீ பரவி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர எலக்ட்ரிக் பைக்குகள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து கொளத்தூர், வியாசர்பாடி, செம்பியம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அதற்குள் ஷோரூம் முழுவதும் தீ பரவி கரும்புகை சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதற்கு சிறிது கால தாமதம் ஆனது. தகவலறிந்த வடசென்னை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 21 எலக்ட்ரிக் பைக்குகள் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது எலக்ட்ரிக் பைக் முழுவதுமாக சார்ஜ் ஆகி அதன் மூலம் வெடித்து தீ பரவியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பைக்குகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Prakash ,Kanyappa Mudali Street, Parimuna Walaja Road ,Peravallur Paper Mills Road ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது