×

பாப்பாக்குடியில் துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடிய 7 பேர் கைது: 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சொகுசு கார் பறிமுதல்

பாப்பாக்குடி: பாப்பாக்குடியில் மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் நேற்று அதிகாலை எஸ்ஐ ஆபிரகாம், காவல‌ர் முத்துராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மான், 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி, இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடிய ஹெட் லைட் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடியது தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாப்பாக்குடி காவல் நிலையம் வந்து வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள், இறந்த மான், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மானை வேட்டையாடியதாக கல்லூரை சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவி குமார், ரமேஷ், ஊத்துமலை கிருஷ்ணா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த யோஸ்வா ராஜ், வாடிப்பட்டி போவாஸ், கோபிசெட்டிபாளையம் பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்டது, 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறையினர் 7 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பல ஆண்டுகளாக மான் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

The post பாப்பாக்குடியில் துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடிய 7 பேர் கைது: 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சொகுசு கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Papakudi ,Forest Department ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...