×

ஸ்ரீரங்கத்தில் வெவ்வேறு பகுதியில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 3 முதியவர் சடலங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

 

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மூன்று வெவ்வேறு பகுதிகளில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத 3 முதியவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் என ஸ்ரீரங்கம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்ரல் 15ம்தேதி இரவு 10.45 மணியளவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகில் காவிரி ஆற்று படித்துறையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இவர் வெள்ளை நிறத்தில் கை வைத்த பனியன் மற்றும், வெள்ளை நிற வேஷ்டியும் அணிந்திருந்தார். இதேபோன்று, ஏப்.25ம் தேதி அதிகாலை 2 மணியளவில் திருவானைக்காவல் தனியார் ஓட்டல் அருகில் திருமஞ்சன வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் இறந்த நிலையில் கிடந்தது.

இவர் சாம்பல் மற்றும் கறுப்பு நிறத்தில் டீசர்ட், வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் கைலியும் அணிந்திருந்தார். இதேபோல் கடந்த 26ம் தேதி காலை 10 மணியளவில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகில் காவிரி ஆற்றில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. இவர் வெள்ளை நிறத்தில் அரை கை சட்டையும், கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார். இவர்கள் மூன்று பேரின் பெயர் மற்றும் விலாசம் உள்பட எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ரங்கம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என ஸ்ரீரங்கம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஸ்ரீரங்கத்தில் வெவ்வேறு பகுதியில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 3 முதியவர் சடலங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Srirananga ,Trichy ,Trichi Sriranangam Police ,Sriranangam ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...