×

ஏலச்சீட்டு நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர்:திருப்பூரில் உள்ள தனியார் ஏலச்சீட்டு நிறுவனத்தில் சீட்டு பணம் தராமல் இழுத்தடிப்பதாக கூறி கொங்கு மண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலைஞர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மகிஷா ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட மகளிரணி தலைவர் ஆனந்தி, செயலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தனியார் ஏலச்சீட்டு நிறுவனத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ஏலச்சீட்டு நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Konga Zone Dealers Association ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!