×

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு 42 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? மேலும், இறந்து கிடந்த நபரின் அருகில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தன. இதில், அவரை மது போதையில் யாராவது அடித்து கொன்றாார்களா? அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நாக்கு வறண்டு இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு, கொத்தனார் வேலைக்காக பெருங்களத்தூரில் கூட்டம், கூட்டமாக பலர் நிற்பது வழக்கம்.

அதில், ஒரு மேஸ்திரி அறிமுகம் இல்லாத நபர்களை வேலைக்காக அழைத்து வந்து, கூடுவாஞ்சேரியில் கொத்தனார் வேலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இறந்து கிடந்த நபரின் சட்டை பாக்கெட்டில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் அவர் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அவரை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம் என்றார். மேலும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் மர்மமான முறையில் இறந்தவரால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Guduancheri railway ,Goodovancheri ,Nandhivaram- ,Gootuwancheri Municipality ,Gootuwancheri ,Gooduvancheri ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரியில் பேருந்து...