×

அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் துறை சார்ந்த அறிவிப்புகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களின் தலைமையில் துறை சார்ந்த அறிவிப்புகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சு. பிரபாகர், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் திரு. அ. சங்கர், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் வெ. கீதா மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் துறை சார்ந்த அறிவிப்புகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chakharapani ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. Stalin ,Head Secretariat ,Laboratory on ,and Work on ,Chakarapani ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...