×

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

 

ஈரோடு, ஏப். 26: ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (25). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் முகக்கவசம் அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்து சரண்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2.5 பவுன் செயினை பறித்தார். மேலும், சரண்யா கையில் இருந்த பிரேஸ்லெட்டை பறிக்க முயன்றபோது அவர் கூச்சலிட்டுள்ளார். இதனால், மர்மநபர் சரண்யாவை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டனர். இதுகுறித்து சென்னிமலை போலீசில் சரண்யா அளித்த புகாரின்பேரில், நகையை சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். சென்னிமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Natarajan ,Sennimalai Komarappa Mudaliar Road, Erode District ,Saranya ,Dinakaran ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு