×

வள்ளியூரில் பைக் திருட்டு

 

நெல்லை,ஏப்.24: நெல்லை அருகே வள்ளியூரில் நகை தொழிலாளியின் பைக்கை திருடிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். வள்ளியூர் அய்யா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூக்க நாராயணன் (36). இவர் தான் அப்பகுதியில் நடத்திவரும் நகை பட்டறை முன்பாக கடந்த 18ம் தேதி இரவு நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். மறுநாள் காலை வந்துபார்த்தபோது பைக்கை காணாதது கண்டு பதறினார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வள்ளியூர் போலீசார், பைக்கை திருடிச்சென்ற மர்மநபரைத் தேடிவருகின்றனர்.

The post வள்ளியூரில் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vallyur ,Paddy ,Nelly ,Vallyur Aiya Temple ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...