×

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி

திருமலை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் சரத்பாபு. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக ஐதராபாத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவரை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கடந்த 21ம்தேதி ஐதராபாத் அழைத்து வந்தனர். ஐதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

1973ம் ஆண்டு ராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்பு தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற கே.பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். ‘முத்து’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார். மேலும் கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் சரத்பாபு இணைந்து நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்தவர். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் படத்தில் நடித்தார். மேலும் சரத்பாபு பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

The post நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sarathbabu ,Tirumala ,Andhra ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி