×

மாணவன் பைக் திருட்டு ஆட்டோ டிரைவர் கைது

குமாரபாளையம்: திருச்செங்கோடு நாராயணபாளையத்தை சேர்ந்தவர் இன்பத்தமிழன்(17). இவர் குமாரபாளையம் எதிர்மேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி காலை கல்லூரிக்கு வந்த மாணவர் கல்லூரி முன்பு பைக்கை நிறுத்திவிட்டு வகுப்புக்கு சென்றார். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில் ராஜம் தியேட்டர் அருகில் உள்ள சின்னையா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன்(19) (எ) கணேஷ்முருகனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இன்பத்தமிழப பைக்கை திருடியதை முருகன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து பைக்கை மீட்டனர்.

The post மாணவன் பைக் திருட்டு ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Enjothamilan ,Narayanapalayam ,Thiruchengod ,Kumarapaleyam Riemate ,Dinakaran ,
× RELATED தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு