×

திருப்பூர் பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்

 

திருப்பூர், ஏப். 23:ராம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிவாசல்கள், மசூதிகள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் நடந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் பிர்தவசி, மாவட்ட பொருளாளர் ஹனிபா, மாவட்ட துணைச்செயலாளர்கள் காஜா பாய், சேக் பரிது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கேயம் ரோடு கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினர் அபிபுர் ரகுமான் மற்றும் மாவட்ட செயலாளர் இப்ராகிம், சத்யாநகர் பள்ளிவாசலில் நடந்த துணைச்செயலாளர் மா.பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதுபோல் அல்அமீன் பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட பொருளாளர் லுக்மான் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுபோல் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

The post திருப்பூர் பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Tirupur ,Ramjan festival ,Ramzan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.