- Cherambadi
- முத்துமாரியம்மன் கோயில் விழா
- காவடி
- Bandalur
- முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
- சேரம்பாடி டான்டீ
- சேரம்பாடி செக்போஸ்ட்
பந்தலூர்,ஏப்.23: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ செக்போஸ்ட் முத்துமாரியம்மன் ஆலயம் திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.
கணபதி ஹோமம், கொடியேற்றுதல் மற்றும் அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் கங்கைக்கு சென்று காவடி,பால்குடம்,பறவைக்காவடி ஊர்வலம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மதியம் அன்னதானம் நடைப்பெற்றது.தொடர்ந்து சிறப்பு பூஜை, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post சேரம்பாடி செக்போஸ்ட் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.