×

பாளை அருகே பயங்கரம் தந்தை, மகன் படுகொலை

நெல்லை: பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி ஜெகஜோதிநகரைச் சேர்ந்தவர் அய்யாதுரை என்ற பீர்மைதீன் (55). மீன் வியாபாரி. இவரது மனைவி வேலம்மாள். இவர்களது மகன் கோதர் (23). கடந்த இரு ஆண்டுக்கு முன் கணவரை பிரிந்த வேலம்மாள், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவன் என்பவருடன் கன்னியாகுமரி சென்று குடியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீன் வியாபாரத்திற்கு வந்த சிவனை, பீர்மைதீன் கண்டித்துள்ளார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்து சென்ற பீர்மைதீன் திரும்பி வரவே இல்லை. அங்குள்ள கல்வெட்டான்குழியில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே தந்தையை சிவன் கும்பல்தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக்கருதிய கோதர், அவர்களிடம் சென்று தட்டிக் கேட்டு, போலீசில் புகார் செய்யப்போவதாக கூறினாராம். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த கோதரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இதையடுத்து செய்துங்கநல்லூர் போலீசில் சிவன் உள்ளிட்ட இருவர் சரண் அடைந்தனர். …

The post பாளை அருகே பயங்கரம் தந்தை, மகன் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellai ,Ayyadurai ,Jekajyothinagar, Krishnapuram Mettukudi ,Palayamkottai ,
× RELATED பாளை. சிறையில் கைதிகள் மோதல்