×

கிரீஸ் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

தேரா பாசி: பஞ்சாப் மாநிலம் தேரா பாசி பகுதியில் அமைந்துள்ள ஃபெடரல் மீட் ஆலையில் அமைக்கப்பட்டிருந்த கிரீஸ் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஒருவர் அந்த தொட்டிக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அடுத்தடுத்து மேலும் 3 பேர் கிரீஸ் தொட்டிக்குள் சென்றனர். அப்போது கிரீஸ் தொட்டிக்குள் இருந்த விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மற்றொருவர் தொட்டிக்குள் நுழைய முயன்ற போது, உள்ளே 4 தொழிலாளர்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்படி, உள்ளூர் மக்களின் துணையுடன் கிரீஸ் தொட்டிக்குள் இருந்த 4 தொழிலாளர்களின் சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அவர்களது உடல்கள் தேரா பாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரீஸ் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Dera Pasi ,Dera Pasi, Punjab ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...