×

மும்பை ஓட்டலில் சிக்கிய கும்பல்; பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்ட நடிகை கைது: 3 மாடல் அழகிகள் அதிரடி மீட்பு

மும்பை: மும்பை ஓட்டலில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல போஜ்புரி நடிகை சுமன் குமாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஆரே காலனி பகுதியில் உள்ள ராயல் பாம் ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போஸ்புரி நடிகை சுமன் குமாரி என்பவர் புரோக்கராக செயல்பட்டு சில மாடல் அழகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.

அதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், பாலியல் தொழில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்த போஜ்புரி நடிகை சுமன் குமாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 3 மாடல் அழகிகளை ஓட்டலில் இருந்து போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட போஜ்புரி நடிகை சுமன் குமாரி, பாலியல் வாடிக்கையாளர்களுக்கு மாடல் அழகிகளை சப்ளை செய்து வருவதாகவும், அதற்காக பல பெண்களை பயன்படுத்தி வந்ததும் தொியவந்தது.

அதையடுத்து ஓட்டலில் இருந்த பாலியல் தொழில் கும்பலை கையும் களவுமாக பிடித்தோம். பெண்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகை சுமன் குமாரியை கைது செய்துள்ளோம். கடந்த 6 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்த சுமன் குமாரி, பாலியல் தொழில் புரோக்கராக எவ்வளவு காலம் செயல்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

The post மும்பை ஓட்டலில் சிக்கிய கும்பல்; பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்ட நடிகை கைது: 3 மாடல் அழகிகள் அதிரடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Suman Kumari ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்