×

லாரி, பைக் மோதி கட்டிடத்தொழிலாளி பலி

 

திருப்பூர், ஏப்.22: திருப்பூர், வீரபாண்டி பகுதியில் லாரி, பைக் மோதிய விபத்தில் கட்டிடத்தொழிலாளி பலியானார்.திருப்பூர், வீரபாண்டி, பழவஞ்சிபாளையம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் முருகேசன் (40). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் அருள்புரம் பகுதியில் கட்டிட வேலை முடிந்து பைக்கில் பல்லடம் சாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். வீரபாண்டி பிரிவு அருகே வந்த போது பின்னால் வந்த லாரியும், பைக்கும் மோதியது.  இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றின்றி நேற்று அவர் பரிதாபமாக உயர்ந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லடத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post லாரி, பைக் மோதி கட்டிடத்தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur, Veerapandi ,Veerapandi ,Palavanchipalayam ,JJ Nagar ,Dinakaran ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்