×

அரளிவிதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை

 

சமயபுரம், ஏப்.22: மண்ணச்சநல்லூர் அருகே பழவியாபாரி மனைவி அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி அழகுநகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (26). இவரது மனைவி கல்பனா (23). இவர்களுக்கு கவின் (6) என்ற மகனும், தனுசியா (3) என்ற மகளும் உள்ளனர். விஜய் ஊர் ஊராக சென்று பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை விஜய் பழங்கள் விற்பனை செய்வதற்காக வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மாலை கல்பனா தனது வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்பனாவை சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்பனா இறந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரளிவிதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Arali ,Mannachanallur ,
× RELATED நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்...