×

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை

சென்னை: திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (42). இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மாமனார், மாமியாரை பார்க்க முன் கதவை பூட்டாமல், கிரில் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் மதியம் 1.30 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,CHENNAI ,Lakshmi ,Gomatipuram ,Thiruninnavur ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!