×

கோத்ரா ரயில் எரிப்பு 8 பேருக்கு ஜாமீன்

புதுடெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “நாளை (இன்று) பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையை 2 வாரங்கள் ஒத்தி வைக்கும்படியும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதனை கேட்ட நீதிபதிகள், எட்டு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினார். நான்கு குற்றவாளிகளின் ஜாமீனை நிராகரித்தார்.

The post கோத்ரா ரயில் எரிப்பு 8 பேருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Godhra ,New Delhi ,Gujarat ,Dinakaran ,
× RELATED மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை...