×

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தொழுகை நடக்கும் வாலிகண்டபுரம் சமாஸ்கான் பள்ளிவாசலில் தூய்மை பணி

பெரம்பலூர்,ஏப்.21: நாளை (22ம்தேதி) புனித ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும், இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள வாலிகண்டபுரம் சமாஸ்கான் பள்ளிவாசல் தூய்மைப்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கி யப் பண்டிகையான புனித ரம்ஜான் பண்டிகை நாளை (22ம்தேதி) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் புனித ரம்ஜான் பண்டிகைக்காக அனைத்து பள்ளிவாசல்களும் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் கிராமத்தில், வி.ஆர்.எஸ்.ஏஸ்.புரம் செல்லும் வழியில் உள்ள, இந்தி ய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 1723ல் கட்டப்பட்டு நடப்பாண்டு 300ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பழமையான சமாஸ்கான் பள்ளிவாசலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும். அது ரம்ஜான் பண்டிகை யை ஒட்டியே நடத்தப்படும். இதனையொட்டி ரம்ஜான் பண்டிகைக்காக இந்த சமா ஸ்கான் பள்ளிவாசல் வளா கத்திற்குள் புற்கள்,புதர்கள் வெட்டப்பட்டு, பள்ளி வாசல் உட்பகுதியும் இந்திய தொல்லியல் துறையினரால் தூய்மைப் பணியாளர்களை வைத்து தூய்மைப் படுத்த ப்பட்டு வருகிறது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய பள்ளிவாசலான வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசல், லப்பைக்குடிகாடு பேரூரா ட்சியிலுள்ள கிழக்கு மஹ ல்லம், மேற்கு மஹல்லம் பள்ளி வாசல்கள், அரும்பா வூரில் உள்ள ஜும்மா பள்ளி வாசல், வாலிகண்டபுரத் தில் உள்ள ஆசார் மக்பூரா பள்ளிவாசல், விசுவக்குடி அத்தக்வா பள்ளிவாசல், மாவட்டத் தலைநகர் பெரம் பலூரில் உள்ள டவுன் பள் ளி வாசல், மதரஸா பள்ளி வாசல், நூர் பள்ளி வாசல், மக்கா பள்ளிவாசல், மதீனா பள்ளிவாசல், துறை மங்கலம் பள்ளிவாசல், ஆலம் பாடி சாலை பள்ளிவாசல் மற்றும் தொண்டமாந்து றை, பெரிய வடகரை, குரு ம்பலூர், தேவையூர், தைக் கால், டி.களத்தூர் கை.கள த்தூர், சத்திரமனை, பூலாம் பாடி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்க ளிலும் ரம்ஜான் பண்டிகை யையொட்டி சிறப்பு தொழு கை நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகரில் மட்டும் அனைத்து பள்ளிவாசல்க ளும் ஒருங்கிணைந்து மௌலானா மேல்நிலைப்ப ள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

The post ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தொழுகை நடக்கும் வாலிகண்டபுரம் சமாஸ்கான் பள்ளிவாசலில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Vallykandapuram ,Samaskan school ,Perambalur ,St. Ramzan ,Vallicantapuram Samaskan School ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...