×

பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பெரம்பலூர்,ஏப்.19: பெரம்பலூர் அருகே பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி யை முடித்து தரக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மரவநத்தம் கிராம மக்கள் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கிராமத்தை சேர்ந்த சிலர் பெரம்பலூர் திரண்டுவந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்தக் கோரிக்கை ம னுவில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டநிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மரவநத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப் பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் சிறுவர்கள் குழந்தைகள் தவறிவிழுந்து விடுகி ன்றனர். மேலும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் மீண்டும்தற்போ து மனு அளித்திருப்பதாக வும் உடனடியாக நிறுத்தப் பட்ட இந்த கழிவு நீர் கால் வாய் அமைக்கும் பணிக ளை முடித்த தர நடவடிக் கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tharakori ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...