×

கலைஞரின் பிறந்தநாளன்று சத்துணவில் இனிப்பு பொங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். பின்னர், பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

  • ரூ.25.70 கோடி செலவில் 17,312 அரசுப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சத்துணவுத்திட்டம், உள்ளகப் புகார் குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் ரூ.50 லட்சத்தில் இணையதள முகப்பு மற்றும் கைப்பேசி செயலிகள் உருவாக்கப்படும்.
  • சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
  • முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மறுசீரமைக்கப்படும்.
  • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை, தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர கண்காணிப்பினை மேற்கொள்வதற்காக, பழுதடைந்த 18,573 கைப்பேசிகளுக்கு மாற்றாக ரூ.9,440 மதிப்பில் புதிய திறன் கைப்பேசிகள் ரூ.17.53 கோடி செலவில் வழங்கப்படும்.
  • குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளர்ச்சி கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்.
  • முன்னேற விழையும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 700 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப்படுத்துவதற்கு எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டிகள் ஒரு மையத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.75 கோடியில் வழங்கப்படும்.
  • குழந்தைகள் மையங்களில் சமையலுக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
  • சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, கலைஞரின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
  • பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த தரவுகளை சேமிக்கும் நிகழ்நேர கைப்பேசி செயலி மூலம் ஆய்வு மற்றும் கண்காணிப்பு, ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்படும்.
  • குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மகளிர் காப்பகங்களில் மன ரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள், தேவையின் அடிப்படையில் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.
  • பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ரூ.50 லட்சம் நிதித் தொகுப்பு உருவாக்கப்படும்.
  • திருச்சி, கோவை மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் ரூ.1.14 கோடியில் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை மாவட்டம், ராயபுரம் சிறுவருக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் ரூ.7 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
  • சென்னை, சிறுமியருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம், நெல்லை, சென்னை மற்றும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லங்களில், பணியாளர் குடியிருப்பு ரூ.10 கோடி செலவில் கட்டப்படும்.

The post கலைஞரின் பிறந்தநாளன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Keetajivan ,Assembly ,Social Welfare ,Women's Rights ,Tamil Nadu ,
× RELATED சொந்தக் கட்சியினரே கடும் எதிர்ப்பு;...