×

குரான் ஓதும் போட்டி

மண்டபம், ஏப்.17: மண்டபம் வட்டாரம் பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் திருக்குரான் ஓதும் போட்டி நடந்தது. 6 முதல் 11 வயது, 12 முதல் 15 வயது வரை என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசாக 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், இறுதி சுற்றில் வெற்றி பெற்ற 90 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தலா ரூ500 வழங்கப்பட்டது.

நெல்லை பேட்டை உஸ்மானி அரபிக் கல்லூரி முதல்வர் ஹீமாயீன் கபீர் பேசினார்.பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் முஹமது அஸ்ஸலாம், செயலாளர் முஹமது ரோஸ் சுல்தான், துணை தலைவர் செய்யது அபுதாஹிர், நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைமை பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமையில் இமாம்கள் போட்டியின் நடுவர்களாக பணியாற்றினர். ஐக்கிய முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள் மற்றும் குர்ஆன் ஓதும் போட்டி குழு நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

The post குரான் ஓதும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Panaikulam United Muslim Association ,Dinakaran ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!