புதுக்கோட்டை: அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் கருதுகிறோம்’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நடைபெற்று வரும் வள்ளலார் 200 முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நெருங்கிய உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களை பார்த்து பேசும் வசதிக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஜோக்கராகத்தான் கருதுகிறோம். வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ரணகளத்தை வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் ரணகளத்திற்கு வேலையே இல்லை. ஏனென்றால் தமிழ்நாடு அமைதியான பூமி. இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணாமலை ஒரு ஜோக்கர்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.