×

கர்ப்பிணி மாயம்

உளுந்தூர்பேட்டை, ஏப். 16: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை மகன் சரவணன் (28). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சத்யா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குழந்தைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்றவர் அதன்பிறகு காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிந்து சத்யாவை தேடி வருகிறார்.

The post கர்ப்பிணி மாயம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Saravanan ,Celladurai ,Puthamangalam ,Ulundurpet, Kallakurichi district ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!