- பால்குடா
- செங்குடியம்மன் கோயில்
- Kandur
- குத்தாலம்
- கண்டியூர் ஊராட்சி
- கூத்தலம் ஒன்றியம் வில்லியநல்லூர், மயிலாடுதுறை மாவட்டம்
- அய்யனார் சாதியம்மன் கோயில்
- கூத்தலம்
குத்தாலம்,ஏப்.16: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சியில் உள்ளது கண்டியூர் கிராமம். இந்த கிராமத்தில் வருமுன் காக்கும் வடிவுடையம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் கரகதிருவிழா நடைபெற்றது. இந்த கோயில் நிகழ்ச்சியில் விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம், அலகு காவடி, இளநீர் காவடிகளை எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து வடிவுடைய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை கண்டியூர் கிராம மக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post குத்தாலம் அருகே கண்டியூரில் வடிவுடையம்மன் கோயிலில் பால்குட விழா appeared first on Dinakaran.