×

திருவரங்குளம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

ஆலங்குடி, ஏப்.14: ஆலங்குடி அருகே திருவரங்குளம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் பலியானது. ஆலங்குடி அருகே திருவரங்குளம் வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள், முந்தரி மரங்கள் உள்ளன. இந்த வன பகுதியில் அதிக அளவிலான மான்கள், குரங்குகள், மயில்கள் உள்ளன. இதனால் உணவு , தண்ணீர் இன்றி விலங்குகளும், பறவைகளும், குடிநீர் தேடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வர தொடங்கின.
இந்நிலையில் வன உயிரினங்களும் மான்கள் சாலைகளை கடக்கும் போது அந்த வழியாக செல்லும் சுற்றி தெரியும் தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியும் பல மான்கள் உயிரிழந்து வருகின்றன. இதனால் திருவரங்குளம் வனப்பகுதிகளுக்கும் உள்ள மான்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் திருவரங்குளம் வனப்பகுதியையொட்டியுள்ள வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்திற்கு அருகில் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சுமார் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post திருவரங்குளம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarangulam forest ,Alangudi ,Tiruvarangulam forest ,Tiruvarangulam ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...