×

ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

ஈரோடு, ஏப். 13: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும், மகுடஞ்சாவடி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ரயில் மோதி ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், இறந்தவர் சம்பவ இடத்தில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் சந்தன நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இதையடுத்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

The post ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Veerapandi Railway Station ,Erode Railway Police ,Makudanjavadi ,Railway Station ,Dinakaran ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு