×

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஏப். 13: திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி விரைவு ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகலரயில் பாதை ரூ.294 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு முறை திரு த்துறைப் பூண்டி அகஸ்தியம்பள்ளி வரை டெமு ரயில் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம், திருவாரூர் செல்வதற்கு வேதாரண்யத்தில் இருந்து நேரடியாக ரயில் இல்லை. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லவும், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கும் சென்று படிக்கும் மாணவர்களும் அதிகமாக உள்ளனர். மேலும் சென்னை , பெங்களூர்,கொல்லம் போன்ற ஊர்களுக்கு நீண்ட பயணம் செல்வதற்கும் இந்த இணைப்பு ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூ, சவுக்கு, காய்கனிகள் மற்றும் உப்பு போன்ற உற்பத்தி பொருள்களை விவசாயிகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பதற்கு விவசாயிகளுக்கு இந்த ரயில் பாதை பயனுள்ளதாக இருக்கும்.

மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகள் மாவட்ட அளவிலான மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு ரயில் மூலம் செல்ல இயலும். இது சம்பந்தமாக தன்னார்வ நிறுவனங்கள், வர்த்தக சங்கம் மற்றும் விவசாயிகளிடமிருந்து அகஸ்தியம்பள்ளி டெமு ரெயிலை, நாகப்பட்டினம் வரை நீடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், இந்த இணைப்பு ரயில் பொருளாதார ரீதியாக ரயில்வே துறைக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். எனவே, தென் மண்டல ரயில்வே நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, அகஸ்தியம்பள்ளி டெமு ரயிலை திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Nagapattinam ,Thiruthuraipoondi ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்