×

சிறப்பு முகாமில் 34 மனுக்கள் மீது எஸ்பி விசாரணை

பெரம்பலூர், ஏப்.13: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று (12ம் தேதி) புதன்கிழமை மாவட்டஎஸ்பி அலுவலகத்தில், சிறப்புமனு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், வி.களத்தூர், கை.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனுமுகாம் மூலம் நேற்று 34 மனுக்கள் பெற்றப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும், பொது மக்கள் இந்த சிறப்பு முகா மினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனு விசா ரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மீண்டும் புதிய பேருந்து நிலையம் செல்ல, காவல்துறை சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post சிறப்பு முகாமில் 34 மனுக்கள் மீது எஸ்பி விசாரணை appeared first on Dinakaran.

Tags : SP ,Perambalur ,Perambalur district ,Shyamla Devi ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...