×

புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு மீன்களை பிடித்தனர். பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரில் தூத்தூ கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி நெல் அறுவடை முடிந்து கண்மாயில் உள்ள நீரும் குறைந்து இருப்பதால் கோடை காலத்தை முன்னிட்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் தூத்தூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். ஊர் முக்கியஸ்தர்கள் போட்டியை துவக்கி வைத்ததும், வலை, கூடை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய மக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். குடும்பம், குடும்பமாக பலர் இத்திருவிழாவில் கலந்துக்கொண்டு கண்மாயில் இருந்து ஜிலேபி, விரால், உள்ளிட்ட நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். தூத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கியதும் சாதி, மதம், பேதமின்றி மக்கள் ஒன்றிணைந்து இந்த திருவிழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Fishing Festival ,Pudukottai ,Thoothoor ,Ponnamaravathi ,Fishing ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!