×

வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் 4 நாட்டு வெடிகுண்டு பதுக்கியவர் மீது வழக்கு

வத்திராயிருப்பு, ஏப். 12: வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் 4 நாட்டு வெடிகுண்டு பதுக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி காவல்நிலைய எஸ் ஐ வேலுச்சாமி என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கான்சாபுரத்தைச் சேர்ந்த சோலையப்பன் என்பவா் தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் அறைக்குள் 4 நாட்டு வெடிகுண்டுகள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 நாட்டு வெடிகுண்டுகளையும் எஸ்ஐ வேலுச்சாமி கைப்பற்றினார். இதனையடுத்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் தோப்பின் உரிமையாளா் சோலையப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு எப்படி இங்கு வந்தது. யாரும் தயார் செய்கிறார்களா இந்த நாட்டு வெடிகுண்டு மூலதனப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது அல்லது வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதா அல்லது நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்யபடுகிறா என்பதையும் இந்த நாட்டு வெடிகுண்டு சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

The post வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்பில் 4 நாட்டு வெடிகுண்டு பதுக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tennanthop ,Vathirairipu ,Vathirayirupu ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு