- தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- திமுக
- மேட்டூர்
- மாவட்ட செயலாளர்
- செல்வாகானபதி
- யூனியன் டி.எம்.கே.
- கொளத்தூர்
- தின மலர்
மேட்டூர், ஏப்.12: கொளத்தூரில் ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் செல்வகணபதி திறந்து வைத்தார். கொளத்தூரில் ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
மேலும், பொதுமக்களுக்கு நீர்-மோர் மற்றும் தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், திமு ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர் ஆறுச்சாமி, சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் எலிசபெத் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், பேரூர் செயலாளர் நடராஜன், கொளத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.