×

திருவொற்றியூர் மயானபூமி மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர் மயானபூமியில் எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் எஸ்.என்.செட்டி சாலையில் உள்ள காசிமேடு இந்து மயானபூமியினை மே 15ம் தேதி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9க்குட்பட்ட எண்ணூர் விரைவுச் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 12ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரும் 12ம் தேதி முதல் மே 15ம் தேதி வரையிலான நாட்களுக்கு உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள எஸ்.என். செட்டி சாலையில் அமைந்துள்ள காசிமேடு இந்து மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திருவொற்றியூர் மயானபூமி மூடல்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Mayanabhumi ,Chennai ,Thiruvotiyur Myanabhumi ,Kasimedu ,Hindu ,S.N. Chetty Road ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்