×

ஜமுனாமரத்தூர் பகுதியில் அதிரடி சோதனை 200 லிட்டர் சாராயம்,2,400 லிட்டர் ஊறல் அழிப்பு

போளூர் : ஜமுனாமரத்தூர் பகுதியில் கலால் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம், 2,400 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர். திருவண்ணாமலை கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போளூர் கலால் இன்ஸ்பெக்டர் கே.புனிதா தலைமையிலான போலீசார் ஜமுனாமரத்தூர் அடுத்த சிங்கிணறு ஓடை மற்றும் ஆதமங்கலம் புதூர் கிராமத்தின் ஏரி அருகேயும் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இடத்தில் சாராயம் காய்ச்சும் கும்பல் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post ஜமுனாமரத்தூர் பகுதியில் அதிரடி சோதனை 200 லிட்டர் சாராயம்,2,400 லிட்டர் ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Jamunamarathur ,
× RELATED மலை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 30...